வட்டி வருமானத்தின் மீதான வரியை நிறுத்தி வைப்பதற்கான தன்னார்வ அறிவிப்பு 5% இல் இருந்து 10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 01, 2025 முதல் அமலுக்கு வருகிறது. மற்றும் வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
சபாநாயகரால், 2025 மார்ச் 20 அன்று கையொப்பமிட்ட 2025 ஆம் ஆண்டின் 2 ஆம் எண் உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டத்தின்படி, பின்வரும் மாற்றங்கள் ஏப்ரல் 01, 2025 முதல் அமலுக்கு வரும்:
பின்வரும் நிபந்தனைகள் பொருந்தாவிட்டால், வட்டி வருமானத்தில் 10% வரி விலக்கி லிருந்து கழிக்கப்படும்:
வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் செய்யப்படும் வைப்புத்தொகைகள்
விலக்கு அல்லது நிறுத்தி வைப்பு வரியின் குறைக்கப்பட்ட விகிதத்திற்காக உள்நாட்டு வருவாய் துறையிடமிருந்து ஒப்புதல் பெற்ற வைப்பாளர்கள். வங்கி அல்லது நிதி நிறுவனம் அத்தகைய ஒப்புதலின்படி செயல்பட்டு தொடர்புடைய நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பின்வரும் நிபந்தனைகளின் கீழ் செய்யப்படும் வைப்புத்தொகைகள்:
இறையாண்மை விதிவிலக்கு சட்டத்தின் கீழ் ஒரு வெளிநாட்டு அரசாங்கம் அல்லது மாகாணத்திற்கு அல்லது அதற்கு சமமானது.
இறையாண்மை விதிவிலக்குகளுக்கும் மேலான பரந்த விலக்குகளை வழங்கும் இலங்கை அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சர்வதேச அமைப்புக்கு.
நீங்கள் இலங்கையில் வசிப்பவராக மற்றும் உங்கள் மதிப்பிடத்தக்க வருமானம் ரூ. 1,800,000 மேலாக இருந்தால், உங்கள் வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரியிலிருந்து நிவாரணம் பெற உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு ஒரு தன்னார்வ பிரகடனத்தை சமர்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்:
நேரில்:டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி,
1வது மாடி, எண். 57,
ஸ்ரீமத் அநாகரிக தர்மபால மாவத்தை,
கொழும்பு 03
(வார நாட்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை)
பதிவு அஞ்.சல் மூலம் மேலே தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
பல்வேறு வங்கிகள்/நிதி நிறுவனங்களில் கணக்குகள் இருந்தால், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
TIN (வரி செலுத்துவோர் அடையாள எண்) தேவை. உங்களிடம் ஒன்று இல்லையென்றால், அதைப் பெற்று வழங்க, உங்கள் வங்கி/நிதி நிறுவனம் உள்நாட்டு வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
ஒரு தன்னார்வ அறிவிப்பு ஒரு மதிப்பீட்டு ஆண்டுக்கு மட்டும் செல்லுபடியாகும் (ஏப்ரல் 01 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை). ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய அறிவிப்பைச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அறிவிப்பைச் சமர்ப்பித்த பிறகு வரி கழிக்கப்பட்டால், உள்நாட்டு வருவாய்த் துறை மூலம் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் ஒரு புதிய வைப்பு கணக்கைத் திறந்தால், எந்தவொரு முந்தைய அறிவிப்பும் செல்லுபடியாகாது. எனவே நீங்கள் புதியதாக விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
மைனர்கள்: ஒரு மைனர் சார்பாக ஒரு பாதுகாவலர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம், இதில் பாதுகாவலரின் NIC மற்றும் TIN ஆகியவற்றை இணைத்தல் அவசியம்.
கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள்: ஒவ்வொரு கணக்காளரும் வட்டி வருமானத்தில் அவரவர் பங்கிற்கு தன் தனியே தங்கள் அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் அறிவிப்பில் உள்ள தகவல்கள் தவறாக இருந்தால், அது செல்லுபடியற்றதாகி விடும், மேலும் வரி கழிக்கப்படும். தவறான தகவல்களைச் சமர்ப்பிப்பது உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் அபராதங்களுக்கு வழிவகுக்கும்.
கூடுதல் அறிவிப்பு:
மார்ச் 28, 2025 தேதியிடப்பட்ட சுற்றறிக்கை எண். SEC/2025/E/03 இன் படி, செல்லுபடியாகும் அறிவிப்புகளைப் பெற்ற வங்கிகள்/நிதி நிறுவனங்கள் தொடர்புடைய நபர்களின் அறிவிக்கப்பட்ட வட்டி வருமானத்திலிருந்து வரியைக் கழிக்கக்கூடாது.
உதவி தேவையா?
உங்கள் வட்டி வருமானத்தில் வரி நிறுத்தத்தை தவிர்க்க உங்கள் அறிவிப்பை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவும்.
படிவத்தை நிரப்புவது அல்லது தொடர்புடைய ஏதேனும் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தால், உதவிக்கு:
உங்கள் அருகிலுள்ள உள்நாட்டு வருவாய் பிராந்திய அலுவலகத்திற்கு வருகை தரவும்.
1944 என்ற எண்ணில் உள்நாட்டு வருவாய் அழைப்பு மையத்தை அழைக்கவும்
அல்லது 0114 317 317 என்ற எண்ணில் டயலொக் ஃபைனான்ஸைத் தொடர்பு கொள்ளவும்
We would like to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie
genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்